வெள்ளரிக்காய், உடலின் தோலை முருதுவாக்கு மட்டுமல்லாமல் முகப்பரு, சூரிய ஒளியால் தோலில் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.
வெள்ளரி வித்து, குடலில் தோன்றும் புழுக்களை கொல்லும் ஆற்றல் கொண்டது. வெள்ளரிக்காய் சாறு குடலுக்கு வலுவூட்டும் ஜுஸ்.
உடல் உறுப்புகளில் முக்கிய பங்காற்றும் கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம் ஆகியவற்றை பாதுகாக்கும் இயல்பினைக் கொண்டது வெள்ளரிக்காய்.
வெள்ளரிக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது குறையும். தலை முடியை நன்கு வளரச் செய்யும். வெள்ளரிக்காயின் இலைகளிலிருந்து காய்ச்சப்படும் கஷாயம், இரத்தக் குழாயைகளைப் பாதுகாக்கிறது.
வெள்ளரி துண்டு
வெள்ளரிக்காய் பசியைத் தூண்டும் வல்லமைக் கொண்டது.
வெள்ளரிப்பழத்தின் சிறப்பு, அதிக தாகத்தை தீர்க்கும் குணம், கோடையில் ஏற்படும் அதிக தாகத்திற்கு மிகவும் ஏற்ற பழம், கபத்தை அதிகரிக்கும்.
வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடாமல், சிறுது உப்பு, நிறைய மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் மேம்படுத்தப்பட்ட சுவையுடன், சளி தொந்தரவு ஏற்படாமல் தப்பிக்கலாம்.
புகை பிடிப்பவர்களுக்கு, வெள்ளரிக்காய் நல்ல பலனைத் தரும். புகை பிடிப்போர் வெள்ளரிக்காயுடன் சிறுது உப்பு சேர்த்து சாப்பிட்டு, மூச்சிப் பயிற்சி செய்ய வேண்டும்.
கண்களின் மேல் வெட்டிய வெள்ளரி துண்டுகளை வைத்தால், கண்களுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.
0 Comments